×

தங்கையை பார்க்க வந்த வாலிபரை தட்டிக் கேட்ட அண்ணனுக்கு சரமாரி அடி: 4 பேருக்கு வலை

தண்டையார்பேட்டை: சென்னை புதுவண்ணாரப்பேட்டை, ஜீவா நகரை சேர்ந்தவர் யுவராஜ் (35). இவரது தங்கை மைதிலி. இவரின் கணவர் 8 வருடங்களுக்கு முன் இறந்து போனதால், ஒரு வாடகை வீட்டில் தனியே வசித்து வருகிறார். இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த நிர்மல் என்ற வாலிபருக்கும் மைதிலிக்கும் கடந்த 3 மாதங்களாக நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இதன்பேரில் மைதிலி வீட்டுக்கு நிர்மல் அடிக்கடி சென்று வருவது வழக்கம். இதை தனது தங்கையிடம் யுவராஜ் தட்டிக் கேட்டுள்ளார்.இந்நிலையில், நேற்றிரவு மைதிலி வீட்டுக்கு நிர்மல் வந்திருப்பதை அறிந்து யுவராஜ், அவரது அண்ணன் சுரேஷ் ஆகிய இருவரும் விரைந்து சென்றனர். நிர்மலை தட்டிக் கேட்டுள்ளனர். இதில் இருதரப்புக்கும் இடையே வாய்த்தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமான நிர்மல், தனது நண்பர்கள் 3 பேரை போன் மூலம் வரவழைத்தார். பின்னர் நிர்மல் உள்பட 4 பேரும் சேர்ந்து யுவராஜை உருட்டுக் கட்டையால் சரமாரி தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.இதில் படுகாயம் அடைந்த யுவராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இப்புகாரின்பேரில் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான நிர்மல் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர். மேலும் மைதிலியிடமும் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்….

The post தங்கையை பார்க்க வந்த வாலிபரை தட்டிக் கேட்ட அண்ணனுக்கு சரமாரி அடி: 4 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Kandadarpet ,Yuvraj ,Jiva Nagar, Chennai ,maithili ,
× RELATED ப்ரிட்ஜ், வாசிங் மெஷின் எரிப்பு; வாலிபர் கைது